ஜல்லிகட்டை வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு அமைப்பு தடை விதித்து விட்டதா ???
ஐயோ !!!
தமிழ் மீதும் தமிழன் மரபு மீதும் தொடுக்கப்பட்டுள்ள போர் அல்லவா அது !!!
நமது பாரம்பரியம் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததல்லவா !!!
உலகிற்கே பண்பாட்டை சொல்லி கொடுத்தது நாம் தானே !!!
இந்திய அரசும் தமிழனை வஞ்சித்து விட்டதே !!!
தமிழ்நாட்டில் மீனவன் கொள்ளப்பட்டால்
தமிழ் மீனவன் கொலை என்று கூறுகிறதே
இந்த வட இந்திய தொலைக்காட்சிகள் !!!
வா இனி இந்தியாவில் நாம் ஒரு அங்கம் இல்லை !!!
நமக்கே நமக்கு என்று ஒரு நாடு அமைத்து கொள்வோம் !!
20 ஆண்டுகள் கழித்தும் ஜல்லிகட்டு நடக்கும் நாங்கள் நடத்தி கட்டுவோம் !!!
என்று
என்னும், பேசும், நியாயம் கேட்கும் என் தமிழ் சகோதர சகோதிரிகளே !!!
உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்
நீங்களும் தமிழுக்கு துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று !!!
உங்களில் எத்தனை பேர் உணர்திருக்கிறீர்கள்
உங்களை அறியாமலே பிற மொழி தாக்கத்தை
உங்கள் அடுத்த தலைமுறை மீது திணித்திருக்கிறீர்கள் என்று ?
புரியவில்லையா ?? கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்குள் !!!
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வைத்துள்ள பெயர் என்ன என்று?
தமிழ் பண்பாடு காக்க நினைக்கும் நாம்
நாம் வீட்டில் இருந்தல்லவா முதலில் அதை கொண்டு வந்திருக்க வேண்டும்?
தமிழ் பெயர்களும் தமிழ் வாழ ஒரு முக்கிய தேவை என்பதை என்று மறந்தீர்கள் ?
தமிழனாகிய உனக்கே தமிழ் பெயர்கள் பிடிக்கவில்லை என்றால்
இன்ன பிற தமிழ் கலைகளில் மட்டும் உன் அக்கறை எதற்கு ?
தமிழையும் தமிழீழத்தையும் விரும்பும் என் நண்பன் ஒருவனுக்கு மகன் பிறந்தான்...
அவனிடம் கேட்டேன்
நண்பா நீயாவது உன் மகனுக்கு தமிழில் பெயர் வைப்பாயா என்று
அதற்கு அவனிடம் இருந்து வந்த பதில்
"அது மிக கடினம் என் மனைவி அதற்கு சம்மதிக்க மாட்டாள்" என்று....
உணர்தேன் அன்று என் பாரதியின் வார்த்தையை "மெல்ல தமிழ் இனி சாகும்"
என் பிள்ளை நாளை என்னை என் இந்த பெயர் வைத்தாய் என்று
வருத்த படக்கூடாது என்று எனும் என் தோழ தோழிகளே
உன் பிள்ளைக்கு தமிழின் பெருமையை தொன்மையை
அவன் பெயரின் உண்மை அர்த்தத்தை உணர்த்து !!!
உன் பிள்ளை உன்னை வாழ்த்துவான்.. வீழ்த்த மாட்டான் !!!
என் என்றால் அவன் உடம்பில் ஓடுவதும் ஒரு தமிழனின் உதிரம் தானே !!!
இவன்
- பா. சுதாகர் !!!