ஏனோ இந்த புகைப்படத்தை பார்த்தபோது
என் மனம் மிகவும் கனத்தது...
மரணத்தை புரிந்துகொள்ள முடியாத இந்த குழந்தை
தன் தந்தைக்கு கையசைத்து பிரியாவிடை கொடுக்கிறது...
"மகளே..
இன்று உன் தந்தையை தியாகி
என்று சொல்லும் இந்த உலகம்
நாளை மறந்து போகும்...
இன்று மின்மினி பூச்சிகளாய்
உன்னை மொய்க்கும் இந்த ஊடகங்களும்
நாளை மறைந்து போகும்...
உனக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கூட
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின்
ஊழல் பட்டியலில் சேர்ந்து போகும்...
உன் தந்தையின் வளர்ச்சியை கண்டு
பொறாமை பட்ட சில உறவுகள்
உன்னையும் உன் தாயையும் இழிவாக பேச கூடும்...
கலங்காதே...
சுயநலம், பொறாமை, பேராசை,
எனும் கடலால் சூழ பட்டது தான் இந்த உலகம்.
இக்கடலினை கவனமாய் கடக்க உதவ கூடிய உன் தந்தை
எனும் துடுப்பை இழந்து விட்டாய்...
வருந்தாதே...
தன்னம்பிக்கை எனும் படகினில் கைகள் என்னும் துடுப்பை பயன்படுத்த பழகிக்கொள்...
உன்னை விட ஒரு சிறந்த ஆறுதல் உனக்கு யாராலும் கொடுக்க முடியாது...
இது முடிவல்ல ஆரம்பம்.. கவனமாய் இரு !!!
- பா. சுதாகர்
என் மனம் மிகவும் கனத்தது...
மரணத்தை புரிந்துகொள்ள முடியாத இந்த குழந்தை
தன் தந்தைக்கு கையசைத்து பிரியாவிடை கொடுக்கிறது...
"மகளே..
இன்று உன் தந்தையை தியாகி
என்று சொல்லும் இந்த உலகம்
நாளை மறந்து போகும்...
இன்று மின்மினி பூச்சிகளாய்
உன்னை மொய்க்கும் இந்த ஊடகங்களும்
நாளை மறைந்து போகும்...
உனக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கூட
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின்
ஊழல் பட்டியலில் சேர்ந்து போகும்...
உன் தந்தையின் வளர்ச்சியை கண்டு
பொறாமை பட்ட சில உறவுகள்
உன்னையும் உன் தாயையும் இழிவாக பேச கூடும்...
கலங்காதே...
சுயநலம், பொறாமை, பேராசை,
எனும் கடலால் சூழ பட்டது தான் இந்த உலகம்.
இக்கடலினை கவனமாய் கடக்க உதவ கூடிய உன் தந்தை
எனும் துடுப்பை இழந்து விட்டாய்...
வருந்தாதே...
தன்னம்பிக்கை எனும் படகினில் கைகள் என்னும் துடுப்பை பயன்படுத்த பழகிக்கொள்...
உன்னை விட ஒரு சிறந்த ஆறுதல் உனக்கு யாராலும் கொடுக்க முடியாது...
இது முடிவல்ல ஆரம்பம்.. கவனமாய் இரு !!!
- பா. சுதாகர்