கலைத்தாய் தன் கண் ஒன்றை இன்று இழந்துவிட்டது...
கலைஉலகத்தின் அட்ஷயப்பாத்திரம் ஒன்று இன்று மூடி கொண்டது...
அரிதாரம் பூசாத பெண்ணின் அழகை
ரசித்த, ரசிக்கவைத்த கண்கள் இன்று மூடி கொண்டது...
பாலசந்தரையும் மகேந்திரனையும் பிசைந்த
கலவையான நீ (பாலுமகேந்திரா) இன்று மறைந்து விட்டாய்...
தென் இந்திய திரைவானில் திறமைகள்
"மூடுபனி"யாய் மறைந்து இருந்த நேரத்தில்
"மூன்றாம் பிறையாய்" தோன்றிய உன்காலம்
"அது ஒரு கனாகாலம்".
தமிழ் திரைஉலகில் "நீங்கள் கேட்டவை" இதுதானே
என்று நீ வினவி படைத்த படைப்புகள்
என்றும் எங்கள் நினைவில் "அழியாத கோலங்கள்"
இன்று நீ எங்கள் "ஓலங்களுக்கு" செவி சாய்க்காமல்
இந்த உலகமெனும் "வீட்டை" விட்டு சென்று இருக்கலாம்..
ஆனால் நீ "மறுபடியும்" பிறந்து பல "வண்ண வண்ண பூக்களை"
படைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அதுவரையில் நீ படைத்த படைப்புகள் பல "தலைமுறைகளுக்கு"
படமாகவும் பாடமாகவும் இருக்கும் ...
- பா. சுதாகர்
கலைஉலகத்தின் அட்ஷயப்பாத்திரம் ஒன்று இன்று மூடி கொண்டது...
அரிதாரம் பூசாத பெண்ணின் அழகை
ரசித்த, ரசிக்கவைத்த கண்கள் இன்று மூடி கொண்டது...
பாலசந்தரையும் மகேந்திரனையும் பிசைந்த
கலவையான நீ (பாலுமகேந்திரா) இன்று மறைந்து விட்டாய்...
தென் இந்திய திரைவானில் திறமைகள்
"மூடுபனி"யாய் மறைந்து இருந்த நேரத்தில்
"மூன்றாம் பிறையாய்" தோன்றிய உன்காலம்
"அது ஒரு கனாகாலம்".
தமிழ் திரைஉலகில் "நீங்கள் கேட்டவை" இதுதானே
என்று நீ வினவி படைத்த படைப்புகள்
என்றும் எங்கள் நினைவில் "அழியாத கோலங்கள்"
இன்று நீ எங்கள் "ஓலங்களுக்கு" செவி சாய்க்காமல்
இந்த உலகமெனும் "வீட்டை" விட்டு சென்று இருக்கலாம்..
ஆனால் நீ "மறுபடியும்" பிறந்து பல "வண்ண வண்ண பூக்களை"
படைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அதுவரையில் நீ படைத்த படைப்புகள் பல "தலைமுறைகளுக்கு"
படமாகவும் பாடமாகவும் இருக்கும் ...
- பா. சுதாகர்