சென்னையே இன்று உனக்கு பிறந்தநாளா??...
சிலருக்கு வாழ்த்து கூறும்போது "வாழ்த்த வயதில்லை" என்று கூறுவோம்,
ஆனால் அது உனக்கு மட்டும் தான் சால பொருந்தும்...
சென்னையே நீ ஆணா ? பெண்ணா ?
பெண்ணாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால்
பெண்னுக்கே உரித்தான அன்பு,கருணை,அரவணைப்பு
அனைத்தையும் உன்னுள் கொண்டு இருக்கிறாயே..
தன்னையும்,உன்னையும் நம்பி வந்தவர்க்கு
பொன்னையும்,மண்ணையும் கொடுத்து
விண் அளவுக்கு உயர்த்தி விடுகிறாயே...
உன் ஸ்பரிஸத்தை தொட்ட பேருந்து நடத்துனரை கூட
"சூப்பர் ஸ்டார்" ஆக்கிவிடுவாய்...
சாதாரண புதல்வர் கூட உன் பார்வை பட்டால்
நாடாளும் "முதல்வர்" .ஆகிவிடுவார்...
உன்னை நாடி வந்தால் பண்னைப்புறத்து "ராசையா" கூட
இசைஞானி ஆகிவிடுவார்...
பரமகுடி பாமரன் கூட கலைஞானி ஆகிவிடுவார்..
உன்னை நேசித்தால் ஊர் போற்றும் இசை புயல் கூட
பார் போற்றும் ஆஸ்கர் நாயகன் ஆகி விடுவார்...
சென்னையே...
உனக்கென்று ஒரு மொழி கொள்ளாமல் பல மொழிகளின்
கலவையை உன் மொழி ஆக்கி கொண்டாய்..
அதனால்தனோ என்னவோ, வடஇந்தியாவில்
தென் இந்தியர்கள் அனைவரையும் உன் பெயர் (மதராஸி) கொண்டே அழைக்கிறார்கள்..
உன்மொழியின் இனிமை கேட்டால் சுவைக்காது
உணர்ந்தால் சிந்தையை விட்டு அகலாது..
உன் பெருமையை இங்கு இருப்பவர்களால் முழுமையாக உணர முடியாது..
சில காலம் வேறு நாட்டுக்கு சென்று பிறகு ஊர் திரும்பும்
பொருளாதார அகதிகளுக்கு தான் புரியும்
நீ அவர்களின் இரண்டாவது அன்னை என்று..
உன்னில் கால் பதிக்கும் அந்த தருணம்
நம்மை அறியாமல் ஒரு பாதுகாப்பு உணர்வு சிரிப்பாய் வெளிப்படும்..
சென்னையே... நேற்றைய என் முன்னோர்களுக்கும்
இன்றைய எனக்கும் நாளைய என் சந்ததியினருக்குமாய் சேர்த்து
உனக்கு ஒரு நன்றி !!!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!!
- பா. சுதாகர்..
ஒரு சென்னை வாசி..
சிலருக்கு வாழ்த்து கூறும்போது "வாழ்த்த வயதில்லை" என்று கூறுவோம்,
ஆனால் அது உனக்கு மட்டும் தான் சால பொருந்தும்...
சென்னையே நீ ஆணா ? பெண்ணா ?
பெண்ணாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால்
பெண்னுக்கே உரித்தான அன்பு,கருணை,அரவணைப்பு
அனைத்தையும் உன்னுள் கொண்டு இருக்கிறாயே..
தன்னையும்,உன்னையும் நம்பி வந்தவர்க்கு
பொன்னையும்,மண்ணையும் கொடுத்து
விண் அளவுக்கு உயர்த்தி விடுகிறாயே...
உன் ஸ்பரிஸத்தை தொட்ட பேருந்து நடத்துனரை கூட
"சூப்பர் ஸ்டார்" ஆக்கிவிடுவாய்...
சாதாரண புதல்வர் கூட உன் பார்வை பட்டால்
நாடாளும் "முதல்வர்" .ஆகிவிடுவார்...
உன்னை நாடி வந்தால் பண்னைப்புறத்து "ராசையா" கூட
இசைஞானி ஆகிவிடுவார்...
பரமகுடி பாமரன் கூட கலைஞானி ஆகிவிடுவார்..
உன்னை நேசித்தால் ஊர் போற்றும் இசை புயல் கூட
பார் போற்றும் ஆஸ்கர் நாயகன் ஆகி விடுவார்...
சென்னையே...
உனக்கென்று ஒரு மொழி கொள்ளாமல் பல மொழிகளின்
கலவையை உன் மொழி ஆக்கி கொண்டாய்..
அதனால்தனோ என்னவோ, வடஇந்தியாவில்
தென் இந்தியர்கள் அனைவரையும் உன் பெயர் (மதராஸி) கொண்டே அழைக்கிறார்கள்..
உன்மொழியின் இனிமை கேட்டால் சுவைக்காது
உணர்ந்தால் சிந்தையை விட்டு அகலாது..
உன் பெருமையை இங்கு இருப்பவர்களால் முழுமையாக உணர முடியாது..
சில காலம் வேறு நாட்டுக்கு சென்று பிறகு ஊர் திரும்பும்
பொருளாதார அகதிகளுக்கு தான் புரியும்
நீ அவர்களின் இரண்டாவது அன்னை என்று..
உன்னில் கால் பதிக்கும் அந்த தருணம்
நம்மை அறியாமல் ஒரு பாதுகாப்பு உணர்வு சிரிப்பாய் வெளிப்படும்..
சென்னையே... நேற்றைய என் முன்னோர்களுக்கும்
இன்றைய எனக்கும் நாளைய என் சந்ததியினருக்குமாய் சேர்த்து
உனக்கு ஒரு நன்றி !!!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!!
- பா. சுதாகர்..
ஒரு சென்னை வாசி..